வருமான வரி அலுவலகத்தில் வருமான வரி விழிப்புணர்வுக் கூட்டம்!

புதுக்கோட்டை வருமான வரி அலுவலகம் சார்பில் வருமான வரி அலுவலகத்தில் வருமான வரி விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-14 07:14 GMT

வருமான வரி விழிப்புணர்வு

புதுக்கோட்டை வருமான வரி அலுவலகம் சார்பில் வருமான வரி அலுவலகத்தில் வருமான வரி விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றதுஇக்கூட்டத்தில் வருமான வரி அதிகாரி P.சதீஷ் குமார், மற்றும் வருமான வரி அதிகாரி R.சுரேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு முன் கூட்டியே வரி செலுத்துவதன் அவசியம் குறித்தும் வரி செலுத்துவோருக்கு வருமான வரித் துறை ஏற்படுத்தியுள்ள புதியவசதிகள் குறித்தும் உரையாற்றினர்.

மேலும் அவர்கள் “பொது மக்கள் தாமாக முன்வந்து தங்கள் ஆண்டு வருமானத்திற்குரிய வரியை முறையாக கணக்கிட்டு வரி செலுத்தி வருமான வரி படிவங்களை உரிய காலத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்றும் வலியுறுத்தினர். இக்கூட்டத்தில் வர்த்தக சங்க நிர்வாகிகள், பட்டய கணக்காளர் சங்க நிர்வாகிகள், வருமான வரி ஆலோசகர்கள், வியாபாரிகள், தொழில் முனைவோர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News