இந்தியன் வங்கி மேலாளர் பிரிவு உபசரிப்பு விழா

சங்கராபுரம் இந்தியன் வங்கி மேலாளர் பிரிவு உபச்சார விழாவில் வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-06-24 03:48 GMT

நினைவு பரிசு வழங்கல் 

சங்கராபுரம் இந்தியன் வங்கி மேலாளர் ரோகித்குமார். இவர் வடலுாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பிரிவு உபசார விழா நடந்தது. உதவி மேலாளர் காயத்ரி தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற பி.டி.ஓ., வெங்கடேசன், நியூ பவர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி தாளார் மணிவண்ணன், பிரகாசம் மற்றும் வங்கி உதவி மேலாளர் பவித்ரன், ஊழியர்கள் ஆண்ட்ரு, ஸ்ரீராம், ராய்உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், வங்கி ஊழியர்கள் சார்பில் ரோகித்குமாருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. சுரேஷ் நன்றி கூறினார்.
Tags:    

Similar News