பறக்கும் படை பறிமுதல் செய்த பணத்தை திரும்ப பெறுவது குறித்த தகவல்!

திருவண்ணாமலையில் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தை திரும்ப பெறுவது குறித்து மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-30 12:10 GMT

 தெ. பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக பணம், பரிசுப் பொருள்களை பறிமுதல் செய்ய தேர்தல் பறக்கும் படை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்கள் பறிமுதல் செய்யும் பணம், பரிசுப் பொருள்கள் மாவட்ட குறைத்தீர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் எந்தவொரு தேர்தல் பிரசாரத்துக்கும் தொடர்பில்லாத பட்சத்தில் அவற்றை தேர்தல் விதிகளுக்கு உள்பட்டு விடுவிக்கும் பணியை மேற்கொள்ளும்.எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தலுக்கு தொடர்பில்லாத பணம், பரிசுப் பொருள்களை திரும்பப் பெற விரும்புவோர் இந்தக் குழுவை அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News