மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு பணி துவக்கம்
ஈரோட்டில் நவம்பர் 29 முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு கணக்கெடுப்பு பணி துவக்கம்
By : King 24x7 Website
Update: 2023-11-27 17:36 GMT
ஈரோடு மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு பதிவு வரும் நவம்பர் 29-ஆம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது. இக்கணக்கெடுப்பு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்க களப்பணியாளர்கள் மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன களப்பணியாளர்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு கணக்கெடுப்பு 2023 பணி நடைபெற உள்ளது. எனவே, ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தங்களை நாடி வரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்க களப்பணியாளர்கள் மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன களப்பணியாளர்களுக்கும் உரிய தகவல்களை வழங்குமாறு ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா கேட்டுக் கொண்டுள்ளார்.