புதிய சுங்கச்சாவடியில் கட்டணம் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்

துவாக்குடி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிக்கான கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மாவட்ட வியாபாரக் கழகம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2024-02-20 10:29 GMT

சுங்கச்சாவடி

துவாக்குடி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிக்கான கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மாவட்ட வியாபாரக் கழகம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட வியாபாரக் கழகத், தலைவா் ஜே.ஜே.எல். ஞானராஜ், செயலாளா் அ. ஜாா்ஜ்ராய் ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி துவாக்குடி அருகே அரைவட்டச் சாலையில், புதுக்கோட்டை மற்றும் தஞ்சை சாலைகள் இணையும் இடத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாா்பில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து 1 கி.மீ. தொலைவில் தஞ்சை சாலையில் துவாக்குடி பகுதியிலும் ஏற்கெனவே ஒரு சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய சுங்கச்சாவடியில் பரிட்சாா்த்த முறையில் கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

1 கி.மீ. இடைவெளியில் இரு சுங்கச்சாவடிகள் அமைத்திருப்பதால் விதிமுறைக்கு மாறாக இருஇடங்களில் கட்டணம் வசூலிக்கப்படும். எனவே, புதிய சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கும் அறிவிப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News