கட்டுமான பணிகளின் தரம் குறித்து பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

பெரம்பலூரில் கட்டுமான பணிகளின் தரம் குறித்து பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-07-01 09:32 GMT

கட்டுமான பணி ஆய்வு 

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.72 கோடி மதிப்பீட்டில் 12 பேருந்து நிறுத்துமிடங்கள், 14 கடைகள், ஒரு உணவகம் மற்றும் கழிவறைகள், உள்ளிட்ட வசதிகளுக்கான கட்டுமானப்பணிகள் நடைபெற்றுவருவதை தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில் மேஷ்ராம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கட்டுமானப்பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்த கண்காணிப்பு அலுவலர் அவர்கள் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சிப் பொறியாளருக்கு உத்தரவிட்டார்.

Tags:    

Similar News