திண்டுக்கல் அரசு கேபிள் டிவி சிக்னல் கட்டுப்பாட்டு அறை ஆய்வு

திண்டுக்கல் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் மாவட்ட அரசு கேபிள் டிவி நிறுவன சிக்னல் கட்டுப்பாட்டு அறையினை தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் ஜீவா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2024-03-17 15:10 GMT

கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த தலைவர்

திண்டுக்கல் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் மாவட்ட அரசு கேபிள் டிவி நிறுவன சிக்னல் கட்டுப்பாட்டு அறையினை தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் ஜீவா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது சிக்னல் மையத்திலிருந்து ஆபரேட்டர்களுக்கு அனுப்பப்படும் கேபிள் டிவி ஒளிபரப்பில் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுகிறதா என கேட்டறிந்தார்.பின்னர் ஆப்பரேட்டர்கள் தங்களது கேபிள் டிவி தொடர்பான பிரச்சனைகளை உடனடியாக தெரிவித்தால்,

அதனை சரி செய்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் செயலிழக்கத்தில் உள்ள செட்டாப் பாக்ஸ்களை உடனடியாக செயலாக்கம் செய்திடவும் அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News