நெல் சாகுபடி வயல்களில் மாவட்ட வேளாண் அதிகாரிகள் ஆய்வு
Update: 2023-11-20 06:49 GMT
ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுந்தரம், விதை ஆய்வு துணை இயக்குனர் சீனிவாசன், வேளாண் துணை இயக்குனர் வேல்,வேளாண் உதவி இயக்குனர்கள் அன்பழகன், கோவிந்தராஜ், விதை ஆய்வாளர் செந்தில்குமார், உதவி வேளாண் அலுவலர் ராமச்சந்திரன் ஆகியோர் அடங்கிய வேளாண் அலுவலர்கள் திருநாவலுார் பகுதிகளில் நடவு செய்யப்பட்டுள்ள நெல் வயல்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து அப்பகுதி விவசாயிகளுக்கு சிறப்பு நெல் சாகுபடி குறித்த தொழில்நுட்பங்களை விளக்கினர்.