கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு செய்தார்.
By : King 24X7 News (B)
Update: 2024-03-31 09:56 GMT
கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் வாகன தணிக்கையை, தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு. கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 நடைபெறயுள்ளதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியம், போத்தாபுரம் பிரிவு சாலை மற்றும் கிருஷ்ணகிரி,
தருமபுரி மாவட்ட எல்லையான சப்பானிப்பட்டி ஆகிய இடங்களில் வாகன தணிக்கையை, தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம். சரயு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளின் போது,வட்டாட்சியர் சுப்பிரமணி, காவேரிப்பட்டிணம் காவல் ஆய்வாளர் பாலாஜி ரமணன் மற்றும் பறக்கும் படை கண்காணிப்பு குழுவினர் உடனிருந்தனர்.