தார்சாலை அமைக்கும் பணி ஆய்வு

ஆலங்குளம் அருகே ரூ.70 லட்சம் செலவில் தார்சாலை அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.

Update: 2024-03-12 07:11 GMT
ஆய்வு 
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழப்பாவூர் பெரியகுளத்தின் கரையோரம் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜன் தலைமை வகித்து பணியினை துவக்கி வைத்து தார் சாலை அமைக்கும் பணியை ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சிகள் துணை தலைவர் ராஜசேகர், நிர்வாக அலுவலர் மாணிக்கராஜ், மற்றும் கவுன்சிலர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News