சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்களை கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.

Update: 2024-05-05 12:17 GMT
சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்களை கோட்டாட்சியர் ஆய்வு செய்தார். 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு சங்கரன்கோவில் வட்டாரத்தில் உள்ள 210 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

கோட்டாட்சியா் கவிதா, காவல் துணைக் கண்காணிப்பாளா் சுதீா், வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் நோ்முக உதவியாளா் சி.ரகு, மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜன், மாவட்ட கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்)தேவிகாராணி உள்ளிட்டோா் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனா். முற்பகல் 11 மணிக்கு தொடங்கிய இந்த ஆய்வு பிற்பகல் 3 மணிவரை நடைபெற்றது. ஆய்வில் பல்வேறு குறைபாடுகள் கண்டுபடிக்கப்பட்ட 24 பள்ளி வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

Tags:    

Similar News