சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆற்காடு மகாலட்சுமி குளோபல் பள்ளியில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-06-27 11:14 GMT

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

ராணிப்பேட்டை மாவட்டம்,ஆற்காடு மகாலட்சுமி குளோபல் பள்ளியில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாணவ- மாணவிகள் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுவதன் நோக்கம் மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து தெரிவித்தனர்.

மேலும் போதை ஒழியட்டும், பாதை ஒளிரட்டும் என பதாகைகள் கையில் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் தண்டபாணி, அகாடமி பொறுப்பாளர்கள் மஞ்சுநாத், பிரமிளா, பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை ஸ்ரீ லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் ஸ்ரீபாலாஜிலோகநாதன், செயலாளர் சாந்திபாலாஜி, தாளாளர் கோமதிபாலாஜி, இணை செயலாளர் பி.வைஷ்ணவி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News