பாபநாசம் கல்லூரியில் உலக மகளிர் தின விழிப்புணர்வு கூட்டம்

திருநெல்வேலி பாபநாசம் கல்லூரியில் உலக மகளிர் தின விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-08 07:07 GMT

விழிப்புணர்வு கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கூட்டம் இன்று (மார்ச் 8) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மேஜர் ரவிசங்கர் தலைமை தாங்கினார். இதில் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை பெண்கள் சிறப்பு மருத்துவர் செல்வசங்கரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
Tags:    

Similar News