சர்வதேச உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு

சர்வதேச உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மனித சங்கிலி விழிப்புணர்வு நடந்தது.

Update: 2024-06-13 11:32 GMT

மனித சங்கிலி விழிப்புணர்வு 

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொழிலாளர் துறை மற்றும் ஹேண்ட் இன் இந்தியா ஆகிய தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து சர்வதேச உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மனித சங்கிலி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்வில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News