ஆரணியில் சர்வதேச யோகா தின விழா

ஆரணி அடுத்த களம்பூர் அரசினர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தின விழா நடைபெற்றது .

Update: 2024-06-21 13:39 GMT

யோகா பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் அரசினர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் இன்று (21.06.2024) சர்வதேச யோகா தின விழா நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியை களம்பூர் அறிவு திருக்கோயில் யோகா மற்றும் ஆன்மீக கல்வி மையம் இணைந்து நடத்தினர்.

இதில் பள்ளி மாணவ ,மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அறிவு திருக்கோயிலைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News