கார்த்தி சிதம்பரம் பேட்டி !

ஆட்சி மாற்றத்தின் போது அதிகாரிகள் பதில் கூறியே ஆக வேண்டும் என கார்த்தி சிதம்பரம் எம்பி பேட்டி அளித்தார்.

Update: 2024-04-08 09:26 GMT

கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மக்களுடைய தேவையை புரிந்து கொண்டு பாஜகவின் மக்கள் விரோத பாதையில் இருந்து, மாற்றுப் பாதையை தெளிவாக காங்கிரசின் தேர்தல் அறிக்கை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காண்பித்துள்ளது. இதைத்தான் எங்களுடைய மற்ற கூட்டணி கட்சிகள் உடைய தலைவர்களும் பாராட்டியுள்ளார்கள். தமிழ்நாட்டின் முதல்வர் வெகுவாக பாராட்டியுள்ளார். ED, IT சோதனை பாஜகவில் இணைந்தால் புனிதர்கள், பாஜகவை எதிர்த்தால் குற்றவாளிகள் என செயல்படுகிறது. ஆட்சி மாற்றம் நடக்கும்போது ஒருதலை பட்சமாக நடக்கும் அதிகாரிகள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News