மதுபோதையில் ரயிலில் பயணம் செய்தவர் கீழே விழுந்து காயம் !
தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுபோதையில் பயணம் செய்தவர் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-30 05:45 GMT
படுகாயம்
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த வெலிங்டன் என்பவர் மது அருந்திவிட்டு தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். திண்டுக்கல் நல்லமனார்கோட்டை அருகே சென்ற போது, பொழுது மதுபோதையில் ரயிலில் இருந்த வெலிங்டன் தவறி விழுந்து இன்று படுகாயம் அடைந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.