வாக்காளர் தின வினாடி வினா போட்டியில் பங்கேற்க அழைப்பு

14-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ஜனவரி 21ம் தேதியன்று நடக்கும் வினாடி வினா போட்டியில் பொதுமக்கள் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் கற்பகம் அழைப்பு விடுத்துள்ளார்,

Update: 2024-01-18 06:33 GMT

 மாவட்ட ஆட்சியர் கற்பகம் 

தமிழ்நாட்டில் வாக்காளர்கள் தேர்தல் நடைமுறையில் பங்கேற்பதை அதிகரிக்கும் நோக்கில் 14-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு SVEEP திட்டத்தின் படி மாநில அளவிலான பொதுமக்களுக்கான வினாடி வினா போட்டி ஜனவரி 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11.00 மணி முதல் காலை 11.15 வரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் www.erolls.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தங்கள் பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்யலாம். இப்போட்டியில் பங்கேற்க ஜனவரி 18 மற்றும் ஜனவரி 19 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர். இதில் கலந்து கொள்வதற்கு பங்கேற்பாளரின் கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆனது கட்டாயமாக உள்ளீடு செய்யப்பட வேண்டும்.

”இந்தியாவில் தேர்தல்கள்” என்ற தலைப்பில் அடிப்படையில் இந்த போட்டியானது நடைபெறும். மேலும் விவரங்களுக்கு மாநில உதவி மைய எண் 1800-4252-1950, மாவட்ட உதவி மைய எண் 1950 ஆகிய உதவி எண்களை தொடர்பு கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் கற்பகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News