தாமிரபரணி ஆரத்தி பெருவிழாவிற்கு அழைப்பு

திருநெல்வேலியில் தாமிரபரணி ஆரத்தி பெருவிழா வரும் 21ம் தேதி துவங்குகிறது.

Update: 2024-05-15 12:12 GMT

 திருநெல்வேலியில் தாமிரபரணி ஆரத்தி பெருவிழா வரும் 21ம் தேதி துவங்குகிறது. 

திருநெல்வேலி மாவட்டத்தில் அன்னை தாமிரபரணி ஆரத்தி பெருவிழா ஏழாம் ஆண்டு வருகின்ற 21ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. அந்த வகையில் வருகின்ற 21ஆம் தேதி காரையாறு, அகஸ்தியர் அருவியிலும், 22ஆம் தேதி பாபநாசம், அம்பாசமுத்திரத்திலும் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்க ஒருங்கிணைத்த அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத்தின் நதிகளில் ஒருங்கிணைப்பாளர் அன்னை ஞானேஸ்வரி இன்று (மே 15) அழைப்பு விடுத்துள்ளார்.
Tags:    

Similar News