சோளிங்கரில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ஜெகத்ரட்சகன்

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்பி ஜெகத்ரட்சகன் சோளிங்கர் நகரில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Update: 2024-06-23 08:23 GMT

நன்றி தெரிவிப்பு 

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ஒன்றியம் போளிப்பாக்கம் கிராமத்தில் தி.மு.க. முன்னாள் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வம் ஏற்பாட்டில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு கூட்டம் நடைபெற்றது. போளிப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்தி முன்னிலை வகித்தார். இதில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் கலந்துகொண்டு,"

என்னை 4-வது முறையாக அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த பொதுமக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அரக்கோணம் தொகுதியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவேன்," என கூறினார்.

  அப்போது மாவட்ட துணைச் செயலாளர்கள் சிவானந்தம், துரை மஸ்தான், சோளிங்கர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் நதியாமதன்குமார் மற்றும் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News