வீடு புகுந்து திருடியவர்களுக்கு சிறை தண்டனை

சிங்கம்புணரி அருகே வீடு புகுந்து திருடியவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Update: 2024-03-27 02:31 GMT

சிறை தண்டனை

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மருதிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நாகசுந்தரம். இவரது வீட்டில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில், மதுரை மாவட்டம் கீழவளவை சேர்ந்த மொட்ட கோபுரத்து ராஜா (23) அதே பகுதியைச் சேர்ந்த முத்துராமு (31), பிருதிவிராஜ் (26),கோட்டை ராஜா, பாலகுமார், இளம்பருதி ஆகிய ஆறு பேரும் சுவர் ஏறி குதித்து வீட்டில் உள்ளவர்களை தாக்கி 18 சவரன் நகை மற்றும் 80 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றனர்.இது சம்பந்தமான வழக்கு சிவகங்கை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதனை தொடர்ந்து குற்றவாளிகள் ஆறு பேருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சுந்தரராஜ் உத்தரவிட்டார்.
Tags:    

Similar News