மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி

மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-06-13 15:52 GMT
வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் என்னும் ஜமாபந்தி நிகழ்ச்சி

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் என்னும் ஜமாபந்தி நிகழ்ச்சி ஒரத்தி உள்வட்டத்திற்கு உட்பட்ட ஒரத்தி, அன்னங்கால், தின்னலூர், கீழ்அத்திவாக்கம், உள்ளிட்ட 18 கிராமங்களில் உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வீட்டுமனை பட்டா மாறுதல், ரேஷன் அட்டை புதுப்பித்தல்,

முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை விண்ணப்பித்தல், பட்டப்பெயர் மாறுதல், வாரிசு சான்று விண்ணப்பித்தல், உள்ளிட்ட மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( நிலம்) நரேந்திரன்,

வட்டாட்சியர் ராஜேஷ், வருவாய் ஆய்வாளர் மணிமேகலை ஆகியோர் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் தரப்பட்டது.

பெறப்பட்ட மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுத்து தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News