சங்கரன்கோவிலில் மல்லிகை பூ விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகை பூ விலை கிடு கிடுவென உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2024-01-14 15:44 GMT
சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகை பூ விலை கிடு கிடுவென உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் அதிக அளவில் மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது குறிப்பாக மல்லிகை பூ அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு சங்கரன்கோவில் மலர் சந்தைக்கு கொண்டுவரப்படுகிறது.

அங்கு ஏலம் மூலம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் மல்லிகை பூவினுடைய விளைச்சல் மிகவும் குறைவாக உள்ளது, மேலும் தேவை அதிகரித்து உள்ளது.

இதன் காரணமாக மல்லிகை பூவின் விலை உயர்ந்து காணப்படுகிறது அதேபோல் பிச்சிப்பூ ஒரு கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில் இன்று 2500 ரூபாய்க்கு விற்பனையாகிறது ,கனகாம்பரம் ஒரு கிலோ 3000 ரூபாய்க்கு விற்பனையாகிறது நாளை தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு பூக்கள் கடுமையாக விலை உயர்ந்துள்ளதாகவும் வியாபாரிகள் தரப்பில் தகவல் தரப்படுகிறது.

  நாள் ஒன்றுக்கு 4000 கிலோ மல்லிகை பூ வரும் மலர் சந்தையில் சுமார் 50 கிலோ மல்லிகை பூ விற்பனைக்கு வருவதாலும் விலை உயர்வு காரணம் எனவும் கூறப்படுகிறது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

Tags:    

Similar News