ஜவ்வாதுமலை ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு !
ஜவ்வாதுமலை ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவிகளுக்கு உணவு பறிமாறி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் .
Update: 2024-07-16 11:23 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவிகளுக்கு உணவு பறிமாறி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய மாவட்ட ஆட்சியர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதூர் நாடு மலை கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
பின்னர் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மாணவ மாணவிகளுக்கு சமைக்கும் சமையலறைக்கு சென்று சமைத்து வைத்திருந்த வெஜிடபிள் பிரியாணி நல்ல முறையில் சமைக்கப்பட்டுள்ளதா சாப்பிட்டு தரம் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் மாணவிகளுக்கு உணவு பரிமாறி மாணவிகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.