வறண்டது பெரிய ஏரி; விவசாயிகள் கவலை

ஜீனூர் பெரிய ஏரி தண்ணீரின்றி வறண்டுள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Update: 2024-06-15 07:46 GMT

ஜீனூர் பெரிய ஏரி தண்ணீரின்றி வறண்டுள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஜீனூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி நீரில்லாமால் காய்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மூன்று வருடங்களுக்கு முன்பு பகுதியில் பெய்த கன மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஏறி முழு கொள்ளளவை எட்டி கடந்த மூன்று வருடங்களாக நீர் நிரம்பி இருந்ததால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கடுமையான வெயில் தாக்கத்தால் ஏரி நீர் அளவு படிப்படியாக குறைந்து ஏரி முழுவதும் வற்றியது இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் ஏரியில் நீர் இல்லமால் வற்றியிருப்பதால் விவசாயித்திற்கும் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என விவசாயிகள் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Tags:    

Similar News