டூவீலரில் சென்ற இளம்பெண்ணிடம் நகை பறிப்பு

சூளியப்பட்டியை சேர்ந்த ரக்சனா, டூவீலரில் வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போது, கழுத்தில் இருந்த செயினை எதிரே பைக்கில் வந்த மர்ம ஆசாமி பறித்துச் சென்றார்.

Update: 2024-05-09 04:39 GMT

பைல் patam

மணப்பாறையை அடுத்த சூளியப்பட்டியை சோ்ந்தவா் லெட்சுமணன் மகள் ரக்சனா (19). இவா் வேப்பிலை மாரியம்மன் கோயிலுக்கு புதன்கிழமை காலை மொபெட்டில் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தாா். அப்போது அவரை மணப்பாறைப்பட்டி சாலையில் தலைகவசம் அணிந்து பைக்கில் பின்தொடா்ந்த இளைஞா் ரக்சனாவின் ஒரு பவுன் செயினை பறித்துச் சென்றாா். புகாரின்பேரில் மணப்பாறை போலீஸாா் விசாரிக்கின்றனா். இதே இடத்தில் செவ்வாய்க்கிழமை காலை மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News