உசிலம்பட்டியில் இன்ஜினியர் வீட்டில் நகை திருட்டு

உசிலம்பட்டியில் நகராட்சியில் பணியாற்றி வரும் பில்டிங் இன்ஜினியர் வீட்டில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-02-18 16:20 GMT

கைது செய்யப்பட்டவர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கீழப்புதூரில் அமைந்துள்ள சந்தன மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சாந்தி .இவர் நகராட்சியில்; பில்டிங் இன்ஜினியராக பணியாற்றி வருகின்றார்.இவரது வீட்டில் கடந்த மாதம் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த பணம் மற்றும் நகையை திருடு போனது.

இதன் அடிப்படையில் சாந்தி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த திருட்டு சம்பவத்தில் தேனி மாவட்டம் சுருளிப்பட்டி சேர்ந்த அப்பா பாண்டி மகன் ஜெயக்குமார்(34) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 5 பவுன் நகையை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News