சேலத்தில் நர்சிடம் நகை பறிப்பு

சேலத்தில் நடந்து சென்ற நர்சிடம் நகை பறித்த மர்ம ஆசாமிகள் குறித்து போலீஸ் விசாரணை நடக்கிறது.

Update: 2024-05-25 06:55 GMT

பைல் படம்

சேலம் சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். அவரது மனைவி சாந்தகுமாரி (வயது 48). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். சாந்தகுமாரி கடந்த 22-ந் தேதி அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென சாந்தகுமாரி கழுத்தில் அணிந்திருந்த 1¼ பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News