சிவகங்கை ஆட்சியர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவு

மரங்களை வெட்டி அகற்றியது குறித்து சிவகங்கை ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Update: 2024-07-04 08:12 GMT

மதுரை உயர் நீதிமன்றம் 

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியைச் சோ்ந்த அன்னம்மாள் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு: தமிழகத்தில் மாநில மரம் என்ற சிறப்பு பெற்ற பனை மரங்கள் வறட்சியைத் தாங்கி வளரக் கூடியவை. தேவகோட்டை பகுதியில் செங்கல் சூளையில் பயன்படுத்துவதற்காக ஏராளமான பனை மரங்களை வேருடன் வெட்டி அகற்றுகின்றனா். இதற்கு அரசு அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெறவில்லை.

இது குறித்து மாவட்ட நிா்வாகம், அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பனை மரங்களை வெட்டி அகற்றியவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அந்த மரங்களைப் பாதுகாக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் அவா் கோரியிருந்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆா். சுரேஷ்குமாா், ஜி. அருள் முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு: மனுதரரின் கோரிக்கை குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என தெரிவித்தனர்.

Tags:    

Similar News