காணும் பொங்கல்; ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

காணும் பொங்கலை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2024-01-17 11:25 GMT

 காணும் பொங்கலை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் கடந்த இரண்டு நாட்களாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் காணும் பொங்கலை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தங்களில் சுற்றுலா பயணிகளிள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. காணும் பொங்கலை முன்னிட்டு உதகைக்கு வந்துள்ளதாகவும், இங்கு நிலவும் இதமான காலநிலயை அனுபவித்தும், புகைப்படங்கள் எடுத்தும் செல்வதாக தெரிவித்தனர்.
Tags:    

Similar News