கடம்பன்குளம் பள்ளிக்கு எஸ்பிஐ வங்கி பரிசு
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி அடைந்த கடம்பன்குளம் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிக்கு எஸ்பிஐ வங்கி பரிசு வழங்கி பாராட்டியது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-09 02:51 GMT
எஸ்பிஐ பரிசு
திருநெல்வேலி மாவட்டம் கடம்பன்குளம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி மூலம் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த சாதனையை பாராட்டும் நிகழ்ச்சி பள்ளியில் நேற்று (மே 8) நடைபெற்றது.
இந்த விழாவிற்கு எஸ்பிஐ வங்கியில் மண்டல மேலாளர் கருணாகரன் கலந்து கொண்டு பள்ளிக்கு பரிசு வழங்கி பாராட்டினார். இதில் முதன்மை மேலாளர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.