மகளிர் உரிமைத் தொகை விவகாரம் - வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை..!

தமிழக அரசின் மகளிர் உரிமை கிடைக்காததை கண்டித்து கள்ளக்குறிச்சியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-10-19 12:53 GMT

மகளிர் உரிமைத்தொகை - முற்றுகைப்போராட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மூங்கில்பாடி கிராமத்தை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தமிழக அரசு வழங்கிய மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இதனால், அதிருப்தி அடைந்த நூற்றுக்கணக்கான பெண்கள், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அனைத்துத் தகுதிகள் இருந்தும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்று புகார் தெரிவித்த பெண்கள், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுத்து தங்களுக்கான உரிமைத் தொகை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி முழக்கங்களை எழுப்பினர். 
Tags:    

Similar News