காமராஜர் நினைவிடத்தை பராமரிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

காமராஜர் நினைவிடத்தை பராமரிக்க வேண்டும் என ஜி.கே.வாசன்

Update: 2024-05-10 10:05 GMT

ஜி.கே வாசன்

காமராஜர் நினைவிடத்தை தொடர்ந்து பராமரிக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "காமராஜர் நினைவிடமானது கோடிக்கணக்கான மக்களுக்கு புனித இடம். அவரின் நினைவிடத்தை முறையாக பராமரிப்பது அவசியமானது. அதை முறையே செய்ய தவறிய தமிழ்நாடு அரசு கடமை உணர்வோடு பராமரிக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

Similar News