புதுகையில் கம்பன் விழா தொடக்கம்!

நிகழ்வுகள்

Update: 2024-07-15 07:30 GMT

கம்பன் பெருவிழா

புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் 49-ஆவது கம்பன் பெருவிழா தொடங்கியது. இதில், சிங்கப்பூரைச் சேர்ந்த கண்ணன் சேஷாத்ரி எழுதிய 'திருப்பாவை பாசுர விளக்கம்' நூலை, எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் வெளியிட, கம்பன் கழகத் தலைவர் எஸ். ராமச்சந்திரன், பொருளாளர் சி. கோவிந்தராஜன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து, 'கலைமகளும் கம்பனும்' என்ற தலைப்பில் இந்திரா சௌந்தரராஜன் பேசினார். சென்னை இசைக்கவிபேசினார். சென்னை இசைக்கவி ரமணன் மகிழ்வுரை நிகழ்த்தினார். வீரமணி ராஜூ, அபிஷேக் ராஜூ ஆகியோரின் தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சிக்கு முத்து மீனாட்சி மருத்துவமனையின் நிறுவனர் க. பெரியசாமி தலைமை வகித்தார். முன்னதாக, கம்பன் கழகத் தலைவர் எஸ். ராமச்சந்திரன் வரவேற்றார். முடிவில் இணைச் செயலர் வெ.முருகையன் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை கம்பன் கழகச் செயலர் ரா. சம்பத்குமார் தொகுத்து வழங்கினார். ஜூலை 21ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு கம்பன் பெருவிழா நடைபெறவுள்ளது.
Tags:    

Similar News