புதுக்கோட்டையில் கம்பன் கழக விழா ஜூன் 12 தொடக்கம்

புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில், 49-ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா ஜூன் 12 தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது.

Update: 2024-05-30 11:19 GMT

கம்பன் கழக விழா

புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில், 49-ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா ஜூன் 12-ஆம் தேதி தொடங்கி, ஜூன் 21-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறவுள்ளது. இதுகுறித்து கம்பன் கழகத்தின் செயலர் ரா. சம்பத்குமார் கூறியது நிகழாண்டுக்கான கம்பன் பெருவிழாவை நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கழகத்தின் தலைவர் எஸ். ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.கூட்டத்தில், ஜூன் 12 ஆம் தேதி தொடங்கி, ஜூன் 21ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு 49- ஆம் ஆண்டு கம்பன்பெருவிழாவை நடத்திட முடிவு செய்யப்பட்டது.

வழக்கம்போல, பள்ளி, கல்லூரி மாணவர் போட்டிகள், விருதுகள் வழங்கல், பட்டிமன்றம், வழக்காடு மன்றம், கவியரங்கம், சொல்லரங்கம் போன்ற நிகழ்ச்சிகளும், உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட சிறப்புப் பேச்சாளர்களும் பங்கேற்கவுள்ளனர் என்றார் சம்பத்குமார்.

Tags:    

Similar News