தென்காசியில் கனரா வாகனங்கள் செல்ல தடை; பொதுமக்கள் வாக்குவாதம் !
தென்காசியில் கனரா வாகனங்கள் செல்ல தடை; பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
Update: 2024-07-03 04:55 GMT
வாக்குவாதம்
தென்காசி மாவட்ட பகுதியில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கனரக லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் அந்தப் பகுதிகளில் விபத்துகளும் சாலை சேதமும் ஏற்படுகிறது. இதனால் குற்றாலம் பேரூராட்சி சார்பில் ராமாலயத்தில் முகப்பில் வாகனங்கள் செல்லாத வகையில் ஆர்ச் வைக்கப்பட்டது.
இதனை இன்று அகற்ற போலீசார் அறிவுறுத்தியதையடுத்து பேரூராட்சி தலைவர் கணேஷ் தாமோதரன் தலைமையில் பொதுமக்களு போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.