காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் எம்பி ஜி. செல்வம் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Update: 2024-06-21 10:15 GMT
வாக்காளர்களுக்கு எம்பி நன்றி

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரும்பேர்கண்டிகை, முருங்கை, ஆனந்தமங்கலம், ஒரத்தி, தின்னலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம் அவர்கள் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி,

ஒன்றிய கழகச் செயலாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம் அவர்கள் காஞ்சிபுரம் நாடாளுமன்றத்தில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த பொதுமக்கள், கழக நிர்வாகிகள் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். பின்னர் பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், மாலை அணிவித்தும்,

சால்வை அணிவித்து ஜி.செல்வம் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் வசந்தா, ஒன்றிய கவுன்சிலர்கள் பார்த்தசாரதி, பொன்மலர் சிவக்குமார், பானுமதி ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News