கண்டதேவி தேரோட்டம் - காவல்துறை சார்பில் பாராட்டு விழா

கண்டதேவி கோவில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்ற நிலையில் காவல்துறை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது

Update: 2024-07-03 14:55 GMT

கண்டதேவி கோவில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்ற நிலையில் காவல்துறை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கண்ட தேதியில் சிவகங்கை சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மாதம் ஜூன் 21ஆம் தேதி நடைபெற்றது. தேரோட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்த பல்வேறு தரப்பினருக்கும் காவல்துறை சார்பாக இராமநாதபுர சரக டிஐஜி துரை தலைமையிலும், சிவகங்கை மாவட்ட எஸ்.பி டோங்கரே பிரவீன் உமேஷ் முன்னிலையிலும் பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் பால்துரை, ஏடிஎஸ்பிகள், டிஎஸ்பிகள், ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள், வருவாய்த் துறையினர், பத்திரிக்கையாளர்கள், தீயணைப்புத் துறையினர், மண்டப உரிமையாளர்கள், உணவக உரிமையாளர்கள், ஜவுளிக்கடை உரிமையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News