எடப்பாடியில் யுனிவர்சல் பள்ளியில் கராத்தே தேர்வு திறன் போட்டி

வேர்ல்ட் சோ- கியோகுஷின் மற்றும் தமிழ்நாடு கியோகுஷின் சின்னு'ஸ கராத்தே அசோசியேசன் சார்பில் யுனிவர்சல் பள்ளியில் நடைபெற்ற கராத்தே தேர்வு திறன் போட்டியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்

Update: 2024-01-01 02:22 GMT

கராத்தே போட்டி

வேர்ல்ட் சோ- கியோகுஷின் மற்றும் தமிழ்நாடு கியோகுஷின் சின்னு'ஸ கராத்தே அசோசியேசன் சார்பில் தமிழ்நாடு  தலைமை பயிற்சியாளர் டாக்டர் சென்சார் சின்னுசாமி தலைமையில் நடைபெற்ற  தேர்வு திறன் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்று பட்டயம் மற்றும் சான்றிதழ் பெற்றனர், மேலும் தேசிய போட்டியில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு சிறப்பு விருந்தினராக  அதிமுக எடப்பாடி நகர செயலாளரும்,நகர மன்ற எதிர்க்கட்சித் தலைவருமான முருகன் மற்றும் யுனிவர்சல் பள்ளி முதல்வர் ஜெகதீஷ் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.

முதல் பரிசு: மிருதுளா. தில்சன். லிங்கேஷ். அக்ஷய குமரன்.இரண்டாம் பரிசு: பிரதக்ஷனா. மூன்றாம் பரிசு: கிருபாகரன். சீனிவாசன் .சசிதரன். நிதின். கௌஷிக். பிரணிக்கா. தனிஷ்கா. ஜெய்தேவ். ஆகிய மாணவர்களுக்கு பரிசு கோப்பை வழங்கினர் மற்றும் உதவி பயிற்சியாளர்கள் ரமேஷ். ரஞ்சித் குமார். ரமேஷ் மோகன். வேல்முருகன். கோகுல் . செல்வம் முருகன். பெற்றோர்கள் மாணவர்கள் ஊர் பொதுமக்கள் வாழ்த்துக்கள் கூறினார்.

Tags:    

Similar News