கருணாநிதி பிறந்தநாள் விழா:ஏழைகளுக்கு நல உதவிகள்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் விழாவில் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியது.

Update: 2024-05-29 14:17 GMT

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் விழாவில் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியது.


சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் தங்கமுத்து தலைமையில் சேலத்தில் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான டி.எம்.செல்வகணபதி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் வருகிற 3-ந் தேதி முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாளையொட்டி ஒன்றிய, நகர, பேரூர், கிளை மற்றும் வார்டு பகுதிகளில் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்குவதுடன் ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும்.

மேலும் பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், சீருடைகள், உணவுகள் வழங்கியும், கோலமிட்டும், விளையாட்டு போட்டிகள் நடத்தியும் பரிசுகள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். அனைத்து தி.மு.க. கொடி கம்பங்களிலும் கட்சி கொடியேற்றி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் சம்பத்குமார், சுந்தரம், எலிசபெத்ராணி, பொருளாளர் பொன்னுசாமி, செயலாளர்கள் ராஜேஷ், பச்சமுத்து, நல்லதம்பி, உள்பட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News