கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

கருங்குழி பேரூராட்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழாவையொட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2024-06-03 12:54 GMT
பைல் படம்

செங்கல்பட்டு மாவட்டம் ,மதுராந்தகம் அருகே கருங்குழி பேரூராட்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101- வது பிறந்தநாள் விழாவையொட்டி பேரூராட்சியில் உள்ள 15 வார்டு கழக கொடி ஏற்றி கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், பொதுமக்களுக்கு வேட்டி சேலை, ஆயிரம் பேருக்கு பிரியாணி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இதில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பேரூராட்சி தலைவர் தசரதன், துணைத் தலைவர் சங்கீதா சங்கர் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பேரூராட்சி கிளை கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினர். இதில் திமுக நிர்வாகிகள் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News