கோட்டைப்பட்டினம் மீனவர்கள் நான்கு பேருக்கு காவல் நீடிப்பு!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட கோட்டைபட்டினம் மீனவர்களின் நீதிமன்ற காவலை வரும் 15ம் தேதி வரை நீட்டித்து யாழ்ப்பாணம் ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.

Update: 2024-07-04 02:49 GMT
கோட்டைப்பட்டி னத்தில் இருந்து கடந்த மாதம் 18ம் தேதி அதிகாலை சிபி ராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பார்த்திபன், சாரதி, முரளி, ராமதாஸ் ஆகிய 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு யாழ்ப்பாணம் ஊர்க்காவல்துறை கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஸ்கரன், 4 மீனவர்களுக்கும் வரும் 15ம் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News