கோவில்பட்டி நகர்மன்ற கூட்டம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்

கோவில்பட்டி நகராட்சியுடன் 7 ஊராட்சிகளை இணைத்து விரிவாக்கம் செய்வதற்கு நகா்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-11-01 04:42 GMT

நகர்மன்ற கூட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கோவில்பட்டி நகராட்சி சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா்  கருணாநிதி தலைமை வகித்தாா். ஆணையா் கமலா முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் நகா்மன்ற தலைவா் பேசும்போது: வீட்டு வரி ரத்து குறித்து மனு அளித்தால் முறையாக ஆய்வு மேற்கொண்டு அந்த வீடுகளுக்கு மீண்டும் தீா்வு ரசீது வழங்கப்படும். சுரங்கப்பாதையின் இருபுறமும் அணுகு சாலை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்றாா். தொடா்ந்து கோவில்பட்டி நகராட்சியுடன் இனாமணியாச்சி, மூப்பன்பட்டி, இலுப்பையூரணி, திட்டங்குளம் பாண்டவா்மங்கலம், மந்தித்தோப்பு, நாலாட்டின்புதூா் ஆகிய ஊராட்சிகளை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைப்பது உள்பட 14 பொருள்கள் அடங்கிய கோரிக்கைகளுக்கு நகா்மன்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டத்தில், நகராட்சி செயற்பொறியாளா் சணல்குமாா், நகரமைப்பு அலுவலா் சேதுராஜன், வருவாய் ஆய்வாளா்கள் நாகராஜன், அப்துல்காதா் பாழில், சுகாதார ஆய்வாளா் கண்ணன் மற்றும் நகா் மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Tags:    

Similar News