பணி நிறைவு பண்ணாரி கோவில் மேலாளருக்கு பாராட்டு

பண்ணாரி அம்மன் கோயில் மேலாளர் பணிநிறைவு பெற்றதையொட்டி பாராட்டு விழா நடந்தது.

Update: 2024-07-01 03:01 GMT

 பாராட்டு விழா

சத்தியமங்கலம் அருகே பண்ணாரி அம்மன் கோயில் மேலாளர் பணிநிறைவு பெற்றதையொட்டி பாராட்டு விழா  நடைபெற்றது. பண்ணாரி மாரியம்மன் கோயிலில் கடந்த 32 ஆண்டுக ளாக மேலாளராகப் பணியாற்றிய எஸ்.டி.தமிழ்ச்செல்வன் சனிக்கிழமை பணியிலிருந்து ஓய்வுபெற்றார். இதையொட்டி, அவருக்கு பாராட்டு விழா  நடைபெற்றது. இதில், சத்தியமங்கலம் நகராட்சித் தலைவர் ஜானகி ராமசாமி வாழ்த்தி பேசினார். நகர்மன்ற உறுப்பினர் ஜெயந்தி தங்கவேலு, திருநீலகண்டர் ஓய்வுபெற்ற பண்ணாரி அம்மன் கோயில் மேலாளர் எஸ்.டி.தமிழ்ச்செல்வன் பாராட்டு விழாவில் பங்கேற்றோர். கண்டர் பொதுநல அறக்கட்டளை  தலைவர் ஜி.தினேஷ் குமார், இளைஞர் காங்கிரஸ் தலைவர்  எஸ்.பி.கார்த்திதிகேயன்,  உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.



Tags:    

Similar News