பணி ஓய்வு பெறும் சேலம் விளையாட்டு மைய ஊழியருக்கு பாராட்டு

பணி ஓய்வு பெறும் சேலம் விளையாட்டு மைய ஊழியருக்கு மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் நடந்தது பாராட்டு விழா நடைபெற்றது.

Update: 2024-05-30 04:45 GMT

பணி ஓய்வு பெறும் சேலம் விளையாட்டு மைய ஊழியருக்கு மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் நடந்தது பாராட்டு விழா நடைபெற்றது.


சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பொட்டியபுரத்தை சேர்ந்தவர் அரிசியப்பன். இவர் இந்திய விளையாட்டு ஆணையத்தின் சேலம் பயிற்சி மையத்தில் மார்க்கராக (ஊழியர்) வேலை பார்த்து வருகிறார். இவர் நாளை (வெள்ளிக்கிழமை) பணி ஓய்வு பெறுகிறார். இவருக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல் தலைமை தாங்கினார்.

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சேலம் பயிற்சி மைய உதவி இயக்குனர் மஞ்சுளா, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கைப்பந்து கழக ஆலோசகர் விஜயராஜ் கலந்து கொண்டு அரிசியப்பனுக்கு மாலை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் கைப்பந்து கழக இணை செயலாளர்கள் வடிவேல், பரமசிவம், துணை செயலாளர் ஹரிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News