குண்டர் சட்டத்தில் கைதாகி விடுதலையான விவசாயிகளுக்கு பாராட்டு

மேல்மா சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு குண்டர் சட்டத்தில் கைதாகி விடுதலை செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.

Update: 2024-02-26 06:57 GMT

பாராட்டு விழா 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 240 நாட்களாக போராடிவரும் விவசாயிகள் ஏழு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி தொடர் அழுத்தம் காரணமாக விடுதலை செய்யப்பட்டனர். இவர்களை பாராட்டும் விதமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு விவசாய சங்கங்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து குண்டர் சட்டத்தில் கைதானவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர் .மேலும் தொடர் போராட்டம் மூலமே சிப்காட் திட்டத்தை கைவிட தமிழக அரசை வலியுறுத்த வேண்டுமென பேசினர்
Tags:    

Similar News