கால்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீரருக்கு பாராட்டு.

செம்பரையில் கால்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்று லால்குடி பகுதிக்கு பெருமை சேர்த்த வீரருக்கு சமூக ஆர்வலர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

Update: 2024-05-28 04:14 GMT

செம்பரையில் கால்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்று லால்குடி பகுதிக்கு பெருமை சேர்த்த வீரருக்கு சமூக ஆர்வலர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.


திருச்சி மாவட்டம் லால்குடி அருகே செம்பரை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தர்மராஜ் .இவரது மகன் ராவணன்.இவர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் வர்ணனையாளராக பணியாற்றினார் அது மட்டும் அல்லாமல் 50க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கு பெற்ற கால்பந்து போட்டி பங்களாதேஷில் நடைபெற்றது. இதில் ராவணன் கலந்து கொண்டு விளையாடி இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தந்தார் பல ஆண்டுகள் இந்திய கால்பந்து அணியின் வீரராக சிறப்பாக விளையாடினார்.

மேலும் தங்கப் பதக்கம் வென்று லால்குடி பகுதிக்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர் ராவணன் சொந்த கிராமமான செம்பரைக்கு வந்துள்ளார். இந்நிலையில் லால்குடி பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அவர் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

Tags:    

Similar News