பணியில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு பாராட்டு

பணியில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு விழுப்புரம் எஸ்பி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

Update: 2024-07-05 13:47 GMT

பணியில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு விழுப்புரம் எஸ்பி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.


கண்டாச்சிப்புரம் காவல் நிலையப் போலீஸாா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மழவந்தாங்கல் சோதனைச் சாவடி அருகே ரூ. 1.75 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கைப்பற்றி, அவற்றை கடத்தி வந்த இருவரை புதன்கிழமை கைதுசெய்தனா்.இப்பணியில் திறம்பட செயல்பட்ட கண்டாச்சிபுரம் காவல் உதவி ஆய்வாளா்ஆனந்தகுமாா், அனந்தபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலா் சுப்பிரமணி, தமிழ் நாடு சிறப்பு காவல் படை 15-ஆம் அணி காவலா்கள் விஜயராஜ், ஏழுமலை ஆகியோருக்கு விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் எஸ். பி. தீபக் சிவாச் பாராட்டி நற்சான்று மற்றும் வெகுமதிகளை வழங்கினாா். விழுப்புரம் உள்கோட்டக்காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ், தனிபிரிவு ஆய்வாளா் தங்க குருநாதன் ஆகியோா் உடனிருந்தனா்.
Tags:    

Similar News