மாணவிகளுக்கு பாராட்டு!

வேலூரில் நடந்த குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை பதிவேற்றி உதவிய மாணவிகளை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

Update: 2024-06-25 05:35 GMT

வேலூரில் நடந்த குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை பதிவேற்றி உதவிய மாணவிகளை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.  

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைக்கான 5000 விண்ணப்பங்களை டி.கே.எம் மகளிர் கல்லூரியில் பயிலும் 45 மாணவியர்களைக் கொண்டு இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவியர்களை பாராட்டும் வகையில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். அப்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணன் உடன் இருந்தார்.
Tags:    

Similar News