குள்ளஞ்சாவடி: மது பாட்டில்கள் விற்றவர் கைது
குள்ளஞ்சாவடி அருகே மது பாட்டில்கள் விற்றவரை போலீசார் கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2024-01-30 10:25 GMT
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் குள்ளஞ்சாவடி காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். குள்ளஞ்சாவடி பகுதியில் உள்ள ரைஸ்மில் ஒன்றின் பின்புறம் மதுபாட்டில் விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு தெரிய வந்தது. இது குறித்து மதுபாட்டில் விற்ற குள்ளஞ்சாவடி இருசப்ப நகர் பாலசுப்ரமணியன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.